நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வட மாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆளுநர் தலைமையில் நேற்று (08) இடம்பெற்ற இந்த நிகழ்வில் 91 அலுவலக உதவியாளர்கள் 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (குடிசார்) மற்றும் 11 குடியேற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 106 உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நியமனக்கடிதம் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப பணியை செய்யப்போகும் மக்கள் நீங்கள். ஒரு நிறுவனத்தில் காரியாலய சேவகனை சந்தித்தே நிறுவனத்தின் தலைவரை சந்திக்கின்றனர். எனவே மக்களுக்கும் அரசிற்கும் மத்தியிலுள்ள சிறந்த பாலமாக நீங்கள் இருக்கவேண்டும். அரசியல் விடயங்களை புறம்தள்ளி மனிதாபிமானத்துடனும் இறை பயத்துடனும் உங்கள் தொழிலை நீங்கள் செய்வீர்கள் என்று விண்ணப்பம் வைக்கின்றேன் என்று ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்
இந்த சீசனை சிறப்பான முறையில் தொடங்கியது. தனது தொடக்க ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன் பின்னர் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது. கடைசியாக மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தொடக்க ஆட்டத்தைத் தவிர மற்ற3 ஆட்டங்களிலும் டெல்லி அணியின் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் கடும் பின்னடைவை சந்தித்தது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில்டெல்லி அணி ரிஷப் பந்த், ஷிகர் தவண் விக்கெட்டை இழந்ததும் ஆட்டம் கண்டது. இதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 6 ரன்களை கூட சேர்க்க முடியாமல் சூப்பர் ஓவர் வரைபோட்டியை இழுத்துச் சென்றது. ரபாடாவின் அசாத்தியமான யார்க்கர்களால் மட்டுமே அந்த ஆட்டத்தில் டெல்லியால் வெற்றி பெற முடிந்தது. அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றியின் விளிம்பில் இர