கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவடைந்து விட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்ப்பில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலத்தில் உள்ள உண்மை, பொய்களை ஆராய்ந்த பின்னர் அதன் அறிக்கையை வெ ளியிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ லுதினன் கமான்டர் நிலந்த சம்பத் முனசிங்க மற்றும் முன்னாள் இராணுவ லுதினன் கமான்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி உட்பட 7 பேரை 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்ப்பில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலத்தில் உள்ள உண்மை, பொய்களை ஆராய்ந்த பின்னர் அதன் அறிக்கையை வெ ளியிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ லுதினன் கமான்டர் நிலந்த சம்பத் முனசிங்க மற்றும் முன்னாள் இராணுவ லுதினன் கமான்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி உட்பட 7 பேரை 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.