2019 - 2021 கல்வியாண்டுக்கான உயர்தர மாணவர் அனுமதி; அதிபரின் அன்பான வேண்டுகோள்.

அநுராதபுர மாவட்டத்தில் போதிய அளவு வளங்களைக் கொண்டு இயங்கி வரும் கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், தூர இடங்களுக்கு சென்று பல இன்னல்களுக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப, வர்த்தக, கலை துறைகளை தொடரும் மாணவர்களின் நலன்கருதியும், இன்னல்களையும், துயரங்களையும் தவிர்க்கும் நோக்கிலும் எமது பாடசாலை வளாகத்திலேயே அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கணித,விஞ்ஞான, தொழில்நுட்ப, வர்த்தக, கலை துறைகளை நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்குரிய புதிய வகுப்புகள் 2019 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதால் வகுப்புக்களை தொடர விரும்பும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் (கட்டாயம்) உரிய திகதியில் பாடசாலைக்கு சமூகம் தந்து வகுப்புக்களில் இணைந்துக்கொள்ளுமாறு பாடசாலையில் அதிபர் ஜனாப் சஹாப்தீன் தெரிவித்துள்ளார். (முஹம்மட் ஹாஸில்)


மேலதிக தொடர்புகளுக்கு:

அதிபர் - 0718025774

செயலாளர் - 0772974163

Pages